எனது பக்கங்கள்

Wednesday 21 September 2011

ஒரு கடிதம் எழுதினேன்...


ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னைக் காதலி..
ப்ளீஸ்..
(ஒரு கடிதம்..)
(ஒரு கடிதம்..)

கண்ணே உன் காலடி மண்ணை திருநீரு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின்மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல்தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழைக் கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி என்னைக் காதலி..
காதலி என்னைக் காதலி..
(ஒரு கடிதம்..)

நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீயின்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாட அவைதானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி.. மை டார்லிங்..
என்னை காதலி.. ப்லீஸ்
காதலி என்னைக் காதலி
(ஒரு கடிதம்..)

இந்தப் பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்:


எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ...(எந்த )

கூந்தல் முடிகள் ... நெற்றி பரப்பில்
கோலம் போடுதே ...அதுவா (2)
சிரிக்கும் போது ...கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே ...அதுவா (2)
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ...

முல்லை நிறத்தில் ...பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே ...அதுவா ...(2)
சங்கு கழுத்தை ...பாசி மணிகள்
தடவுகின்றதே ...அதுவா (2)
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும்
புன்னகை செய்வாய் ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் ...
அதுவா ...அதுவா ...அதுவா ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது ...
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ...

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று ...
ஏதோ ....அது ஏதோ ...
அடி ஏதோ உன்னிடம் ....
இருக்கிறது ...

இந்தப் பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்:


மயில் போல பொண்ணு ஒன்னு


மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒண்ணு
மயில் போல பொண்ணு ஒண்ணு
கிளி போல பேச்சு ஒண்ணு
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல


மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு...........  

வண்டியில வண்ண மயில் நீயும் போன
சக்கரமா என் மனசு சுத்துதடி
மனதார மல்லி மரிகொழுந்து செம்பகமே
முன முறியாப் பூவே என முரிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தெனம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரனைத் தரலாம்
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு...........  

வெள்ளி நிலா மேகத்துல வாரதுபோல்
மல்லிகப் பூ பந்தளோட வந்தது யாரு
சிறு ஓலையில உன் நெனப்பா எழுதி வெச்சேன்
ஒரு எழுத்தரியாத காத்தும் வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்துச் சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

மயில் போல பொண்ணு ஒண்ணு
மயில் போல பொண்ணு ஒண்ணு
கிளி போல பேச்சு ஒண்ணு
குயில் போல பாட்டு ஒண்ணு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மயில் போல பொண்ணு ஒண்ணு
பொண்ணு ஒண்ணு...........  

இந்தப் பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்:


புல்வெளி புல்வெளி தன்னில்...


புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய்ச் செல்லமாய்த் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா?
நான் புல்லில் இறங்கவா.. இல்லை பூவில் உறங்கவா...


சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூறு வண்ணம் உன்மேல் தந்தது யாரு?
இலைகளில் ஒளிகின்ற கிளிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்


துள்துள்துள் துள்துள்துள்ளென துள்ளும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திறந்திருக்கு பாருங்கள் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்... 

இந்தப் பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்:



Saturday 17 September 2011

en mel vizhundha / என் மேல் விழுந்த


என் மேல் விழுந்த மழை துளியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? 


என்னை எழுப்பிய பூங்காற்றே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே 
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல் 
உனக்குள் தானே நான் இருந்தேன் 


(என் மேல் விழுந்த...)


மண்ணை திறந்தால் நீர் இருக்கும் 
என் மனதை திறந்தால் நீ இருப்பாய் 
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்


(என் மேல் விழுந்த ...)


இலையும் மலரும் உரசுகையில் 
என்ன பாஷை பேசிடுமோ 
அலையும் கரையும் உரசுகையில் 
பேசும் பாஷை பேசிடுமோ 
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ 
பார்வை ரெண்டும் பேசிகொண்டால் 
பாஷை ஊமை ஆகிவிடுமோ 


(என் மேல் விழுந்த...)


இந்த பாடலைப் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்:



kaadhal rojavae / காதல் ரோஜாவே


காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே (2)
கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்... 
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே... 


தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம் 
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம் 
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம் 
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம் 
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்... 
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே...


வீசுகின்ற தென்றலே , வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா ,பெண்மயில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே , கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே , புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவையென்ன சேவை
முள்ளோடு தான் முதன்கள சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே... 


இந்த பாடலைப் பார்க்க கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்: