எனது பக்கங்கள்

Tuesday 13 December 2011

கிராமத்து கோழி குழம்பு !!!


தேவையானவை:
  1. கோழிக்கறி.................................1 /2 கிலோ 
  2. வெங்காயம்.................4 
  3. பச்சை மிளகாய் ....................4 
  4. தக்காளி.....................................4  
  5. சிவப்பு மிளகாய்.........................10 
  6. மல்லி .............................................25 கிராம்/கைப்பிடி
  7. மஞ்சள் பொடி................................கொஞ்சம் 
  8. மிளகு ...............................................1 தேக்கரண்டி
  9. சீரகம்.................................................1 தேக்கரண்டி 
  10. சோம்பு...............................................1 /2  தேக்கரண்டி 
  11. கசகசா..................................................1 தேக்கரண்டி 
  12. இஞ்சி................................................. 1 இன்ச் நீளம் 
  13. பூண்டு................................................10 பல் 
  14. தேங்காய்......................................... 1 /2 மூடி 
  15. ஏலம்...................................................1  
  16. பட்டை............................................. சிறு துண்டு
  17. கிராம்பு...............................................5
  18. எண்ணெய்.......................................3 தேக்கரண்டி 
  19. கறிவேப்பிலை..............................1 கொத்து 
  20. உப்பு ...............................................தேவையான அளவு  


செய்முறை:

    • கோழிக்கறியை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ளவும். 
  • சிவப்பு மிளகாய், மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை வறுத்து அரைத்துக் கொள்ளவும். 
  • இஞ்சியைத் தட்டி வைக்கவும். பூண்டை இரண்டாக நறுக்கவும்
  • வெங்காயத்தை  நைசாக நறுக்கிக் கொள்ளவும். வேண்டுமானால்,சின்ன வெங்காயமும் போட்டுக் கொள்ளலாம்.
  • பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும்
  • தக்காளியை 8 ஆக நறுக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும்,ஏலக்காயை உரித்து போட்டு, அத்துடன் பட்டை+ கிராம்பையும் போடவும். சிவந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். 
  • வெங்காயம் நன்கு சிவந்ததும், தக்காளி போட்டு,அதில் தட்டிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, கோழிக்கறி, மஞ்சள் பொடி + உப்பு போட்டு நன்கு வதக்கவும். 
  • கறி நன்கு வதங்கி நீர் விட்டு வரும். இதனை 5 -10 நிமிடம் வதங்கியதும்  கறி நன்கு வெந்துவிடும், அதில் அரைத்த மிளகாய் +தேங்காயை போட்டு வதக்கி, கறி முழுகும் அளவு நீர் ஊற்றவும்.  
  • குழம்பு கொதித்து கெட்டியாக வரும்போது இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.
குறிப்பு:
தேங்காய் க்கு பதிலாக தேங்காய்ப் பாலும் ஊற்றி கோழி குழம்பு செய்யலாம்... மிகவும் ருசியாக இருக்கும் ஆனால் அதில் கொழுப்பு சத்து அதிகம் உள்ளது கவனமாக இருக்கவும்... 

No comments: