எனது பக்கங்கள்

Tuesday 4 October 2011

தொடத் தொட மலர்ந்ததென்ன / thoda thoda lyrics


தொடத் தொட  மலர்ந்ததென்ன ...பூவே
தொட்டவனை மறந்ததென்ன

தொடத் தொட  மலர்ந்ததென்ன...பூவே
தொட்டவனை மறந்ததென்ன
பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன
பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன (தொடத் தொட )

அந்த இல வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடி தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதற் பூவை யார் பறித்தார்
காதலர் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே ...என் வசம் நானில்லை ...

தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே
சுடச் சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ...ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப் பின்ன நடுக்கமென்ன
தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே
சுடச் சுட நனைந்ததென்ன

பனி தனில் குளித்த பால் மலர் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இவள் வளர்ந்தேன்
இலை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத் தொட மலர்ந்ததென்ன ... பூவே
சுடச் சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிதா ..ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன

தொடத் தொட  மலர்ந்ததென்ன ...பூவே
தொட்டவனை மறந்ததென்ன ...

இந்த பாடலின் வீடியோவை கீழே பார்க்கவும்:


No comments: