எனது பக்கங்கள்

Wednesday 7 August 2013

முட்டாள்கள் தினம்!!


மனிதன் மனிதனுக்காக கொண்டாடும் தினம் 
தெரிந்தோ தெரியாமலோ 
மனிதன் உணர்ந்திருக்கிறான் 
மற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் 
மனிதன் இன்றளவும் முட்டாளாகவே இருக்கிறான் என்பதை...


முட்டாள்கள் தினம் மிக அவசியமான தினமே!!!
ஜாதி வெறி கொண்ட முட்டாள்களுக்காக 
இன வெறி கொண்ட முட்டாள்களுக்காக 
நிற வெறி கொண்ட முட்டாள்களுக்காக 
இவை அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் முட்டாள்களுக்காக
முட்டாள்கள் தின நல்வாழ்த்துக்கள்!!!

Monday 5 August 2013

வெளிப்பாடு...




அவன் எனக்காய் மெனக்கெடும் அனைத்தும் 
எனக்கான அவனது அன்பின் வெளிப்பாடே!

எனக்காய் பல மைல் தூரங்களை 
கடந்து வரும்பொழுதும் ...

எனக்காக நெடு நேரம் 
யாருமற்ற தெருக்களில் 
காத்திருக்கும் பொழுதும்... 

எனது சோகமான தருணங்களில் 
அரவணைப்பாய் 
தோல் கொடுக்கும் பொழுதும்...

எனது கோபத்தை ஏற்றுக்கொண்டு 
அன்பை மட்டும் 
பரிசளிக்கும் பொழுதும்... 

எனது மகிழ்ச்சிகளை 
மேலும் பலமடங்காக ஆக்கும் 
வித்தைகளை உபயோகிக்கும் பொழுதும்...

அவனது கண்களில் 
நான் காண்பதுண்டு 
எனக்காய் அவன் கொண்ட 
நட்பின் வெளிப்பாடை... 

மனோ வியாதி!




யாருக்கு தான் இல்லை 
மனோ வியாதி ...

எனக்கும் உண்டு 
ஏன் உங்களுக்கும் உண்டு 

அந்த மரியாதைக்குரிய மனிதர்களை 
ஏளனம் செய்வதும் 
வெறுத்து ஒதுக்குவதும் ஏன்... 

ஒதுக்குவதனால் 
ஏளனம் செய்வதானால்
சுய அறிவோடு 
மனித குலத்துக்கு 
தவறுகள் பல இழைக்கும் 
சபிக்கப்பட்ட மனிதர்களே பொருத்தமானவர்கள் ...

மனோ வியாதி உள்ளவன் 
ஒரு உன்னதமான மனித பிறவி...
அவர்களிடத்தில் காணப்படும் 
நேர்மையும் அன்பும் 
இன்றைய வாழ்வில் காண கிடைக்காத 
ஓர் அற்புதமே... 

மனிதனை மனிதனை பாருங்கள் 
உங்களை விட உயர்ந்தவர்கள் 
இவர்கள் 
கடவுளின் பிள்ளைகள்!!!

அழகு!!!



அவள் சிறு குழந்தைகளை 
கொஞ்சும் பொழுதுகளில் 
அவளது கொஞ்சல் அழகே!!!

அவள் உடன்பிறந்தவர்களிடம் 
சண்டையிட்டு கோபிக்கும் பொழுதுகளில் 
அவளது கோபம் அழகே!!!

அவள் தோழிகளோடு 
அரட்டை அடித்து முகம் மலரும் பொழுதுகளில் 
அவளது மகிழ்ச்சி அழகே!!!

அவள் அவளுக்காய் பிறந்த 
மணாளனை பார்த்து நானும் பொழுதுகளில் 
அவளது வெட்கம் அழகே!!! 

யாதொரு தருணத்திலும் 
பெண்களும் பெண்மையும் 
அழகே!!!