எனது பக்கங்கள்

Monday 5 August 2013

மனோ வியாதி!




யாருக்கு தான் இல்லை 
மனோ வியாதி ...

எனக்கும் உண்டு 
ஏன் உங்களுக்கும் உண்டு 

அந்த மரியாதைக்குரிய மனிதர்களை 
ஏளனம் செய்வதும் 
வெறுத்து ஒதுக்குவதும் ஏன்... 

ஒதுக்குவதனால் 
ஏளனம் செய்வதானால்
சுய அறிவோடு 
மனித குலத்துக்கு 
தவறுகள் பல இழைக்கும் 
சபிக்கப்பட்ட மனிதர்களே பொருத்தமானவர்கள் ...

மனோ வியாதி உள்ளவன் 
ஒரு உன்னதமான மனித பிறவி...
அவர்களிடத்தில் காணப்படும் 
நேர்மையும் அன்பும் 
இன்றைய வாழ்வில் காண கிடைக்காத 
ஓர் அற்புதமே... 

மனிதனை மனிதனை பாருங்கள் 
உங்களை விட உயர்ந்தவர்கள் 
இவர்கள் 
கடவுளின் பிள்ளைகள்!!!

No comments: