எனது பக்கங்கள்

Monday 5 August 2013

வெளிப்பாடு...




அவன் எனக்காய் மெனக்கெடும் அனைத்தும் 
எனக்கான அவனது அன்பின் வெளிப்பாடே!

எனக்காய் பல மைல் தூரங்களை 
கடந்து வரும்பொழுதும் ...

எனக்காக நெடு நேரம் 
யாருமற்ற தெருக்களில் 
காத்திருக்கும் பொழுதும்... 

எனது சோகமான தருணங்களில் 
அரவணைப்பாய் 
தோல் கொடுக்கும் பொழுதும்...

எனது கோபத்தை ஏற்றுக்கொண்டு 
அன்பை மட்டும் 
பரிசளிக்கும் பொழுதும்... 

எனது மகிழ்ச்சிகளை 
மேலும் பலமடங்காக ஆக்கும் 
வித்தைகளை உபயோகிக்கும் பொழுதும்...

அவனது கண்களில் 
நான் காண்பதுண்டு 
எனக்காய் அவன் கொண்ட 
நட்பின் வெளிப்பாடை... 

No comments: